எதிரியாக இருந்தாலும் துரோகியாக மாறாத நிலை பெறுவோம்!!!!
எதிர்ப்பு கோபத்தை வெளிப்படுத்தும்... அதன் தாக்கம் விரைவில் குறையும்... அதனால் ஏற்படும் விழைவு மாறவும் வாய்ப்புண்டு... உறவுக்குள்ளோ, நட்புக்குள்ளோ ஏற்படும் மனகசப்பு எதிர்ப்பாக இருக்கும் போது அதன் வீரியம் குறைந்தவுடன் நதிகள் இணைவது போது சுவடு தெரியாமல் இணைந்துக் கொள்ளும்.... ஆனால் துரோகம் இணையாமல் பழிக்கு வழித் தேடும்... அது உதட்டில் தேனும் உள்ளத்தில் விஷமும் கொண்டு மெதுவாக கொல்லும்...
நன்முறையில் பயணித்துக் கொண்டே எதிர்பாராமல் படுகுழியில் தள்ளும்.. இது தவிர்க்கப்பட வேண்டியது.... நம்பிக்கை என்பது அனைவரிடத்தும் எளிதில் வந்துவிடுவதில்லை.... அதற்குரியவர்களாக ஒரு சிலரே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.... ஆழ்மனதின் எண்ணங்கள், ஏக்கங்கள், நன்மை தீமை தனிப்பட்ட கருத்துக்கள் யாவும் கள்ளமின்றி பகிரப்படும்... அந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைப்பதை விட கொடுமையான செயல் இல்லை எனலாம்....
ஒரு நண்பன் எதிரியாகலாம்' எதிரி நண்பனாகலாம்... ஆனால் ஒரு துரோகி நண்பனாக முடியாது... எதிர்ப்பின் வலியை மனது எளிதில் தாங்கிக் கொள்ளும்... துரோகத்தின் பழியை தாங்க முடியாது.... அது உடைந்த கண்ணாடிபோல மீண்டும் பழைய நிலை திரும்பாது....
பல சரித்திர வரலாற்றில் கூட எதிரிகள் இன்றும் வீரத்துடன் போற்றப்படுகின்றனர்... ஆனால் துரோகிகள் எத்தனை யுகங்கள் கடந்தாலும் தூற்றப்படுவர்... அவர்களின் துரோக வடு வரலாற்று பக்கங்களையும் அழுக்காக்கிவிடும்.... அவ்வளவு எளிதாக மறைவதில்லை....
யாரேனும் உங்களுக்கு பகையாக மாறினால் எதிர்த்து நின்று போராடுங்கள்... இல்லையேல் அதனினும் சிறப்பாக மெளனமாக விலகி செல்லுங்கள்... துரோகத்தின் வழி பதில் அளிக்காதீர்.... எட்டி நின்று வாள் வீசினாலும் பரவாயில்லை கட்டியணைத்து முதுகில் குத்தாதீர்....
அதனால் வலியோடு .பழியும் வந்து சேரும்.....

எதிர்ப்பு கோபத்தை வெளிப்படுத்தும்... அதன் தாக்கம் விரைவில் குறையும்... அதனால் ஏற்படும் விழைவு மாறவும் வாய்ப்புண்டு... உறவுக்குள்ளோ, நட்புக்குள்ளோ ஏற்படும் மனகசப்பு எதிர்ப்பாக இருக்கும் போது அதன் வீரியம் குறைந்தவுடன் நதிகள் இணைவது போது சுவடு தெரியாமல் இணைந்துக் கொள்ளும்.... ஆனால் துரோகம் இணையாமல் பழிக்கு வழித் தேடும்... அது உதட்டில் தேனும் உள்ளத்தில் விஷமும் கொண்டு மெதுவாக கொல்லும்...
நன்முறையில் பயணித்துக் கொண்டே எதிர்பாராமல் படுகுழியில் தள்ளும்.. இது தவிர்க்கப்பட வேண்டியது.... நம்பிக்கை என்பது அனைவரிடத்தும் எளிதில் வந்துவிடுவதில்லை.... அதற்குரியவர்களாக ஒரு சிலரே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.... ஆழ்மனதின் எண்ணங்கள், ஏக்கங்கள், நன்மை தீமை தனிப்பட்ட கருத்துக்கள் யாவும் கள்ளமின்றி பகிரப்படும்... அந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைப்பதை விட கொடுமையான செயல் இல்லை எனலாம்....
ஒரு நண்பன் எதிரியாகலாம்' எதிரி நண்பனாகலாம்... ஆனால் ஒரு துரோகி நண்பனாக முடியாது... எதிர்ப்பின் வலியை மனது எளிதில் தாங்கிக் கொள்ளும்... துரோகத்தின் பழியை தாங்க முடியாது.... அது உடைந்த கண்ணாடிபோல மீண்டும் பழைய நிலை திரும்பாது....
பல சரித்திர வரலாற்றில் கூட எதிரிகள் இன்றும் வீரத்துடன் போற்றப்படுகின்றனர்... ஆனால் துரோகிகள் எத்தனை யுகங்கள் கடந்தாலும் தூற்றப்படுவர்... அவர்களின் துரோக வடு வரலாற்று பக்கங்களையும் அழுக்காக்கிவிடும்.... அவ்வளவு எளிதாக மறைவதில்லை....
யாரேனும் உங்களுக்கு பகையாக மாறினால் எதிர்த்து நின்று போராடுங்கள்... இல்லையேல் அதனினும் சிறப்பாக மெளனமாக விலகி செல்லுங்கள்... துரோகத்தின் வழி பதில் அளிக்காதீர்.... எட்டி நின்று வாள் வீசினாலும் பரவாயில்லை கட்டியணைத்து முதுகில் குத்தாதீர்....
அதனால் வலியோடு .பழியும் வந்து சேரும்.....

Super
ReplyDelete