Saturday, October 20, 2018

தவிப்பு......

அடிக்கடி தவிக்க விட்டு செல்வது சுயநலமா? சூழ்நிலையா!!!!
தவிக்க விட்டு செல்பவர்களையே இடைவிடாது எண்ணுவது முடிவிலா அன்பா?
முட்டாள் தனமா!!!!
அவன் தன் பணியைத் தொடர!!
அவள் மனம் அவனைத் தொடர!!
சிரித்து பேசியகாலத்தை மறந்து
அவன் மறைய!!
அழகிய அந்த நாட்களை எண்ணி
அவள் உறைய!!!
தேவையில்லையென இடையில் விட்டு
செல்லும் மனமே!!!
தெளிவிலா பயணத்தை தொடராமல்

 இருந்திருந்தால் நலமே!!!
 படம் இதைக் கொண்டிருக்கலாம்: பறவை மற்றும் வெளிப்புறம்

No comments:

Post a Comment