பார்த்துக் கொண்டே இருக்க தூண்டும்!!பார்வையில் காட்சி கிடையாது!!
பேசிக் கொண்டே இருக்க வேண்டும்!!
வார்த்தையில் பொருள் கிடையாது!!
அருகிலேயே இருக்க வேண்டும்!!
அவசியம் ஏன் என தெரியாது!!
நினைவிலேயே மூழ்க வேண்டும்!!
நியதி எதுவும் கிடையாது!!
கனவிலேயும் வரவேண்டும்!!
கால நேரம் கிடையாது!!
மனதிலேயே வாழ வேண்டும்!!
மாற்றம் என்பது கிடையாது!!
ஆம்.. காதல் உலகு வரையறையற்றதே!!
அதில் "நீயும் நானும் " என்பதே தவமாகும்!!
உண்மை அன்பே பெறும் வரமாகும்!!
No comments:
Post a Comment