அமைதி!! அமைதி!! அமைதி!!
அமைதி பல்வேறு சூழலில் பல்வேறு பொருள்படுகிறது... அமைதியான சூழல் கவிதைக்கும் , கற்பனைக்கும் வழிவகுக்கிறது... யாருமில்லா தனி வெளியில் இயற்கையின் அழகில் அமைதியான தெளிந்த நீரோடை போன்ற மனதுடன், இரைச்சலற்ற நிலையில் பல இனிய கற்பனைகள் வந்து சேரும்....
அமைதியை மெளனத்துடன் ஒப்பிட முடியாது... அது மெளனம் தாண்டிய நிலை... அமைதிக்கு பல முகங்கள் உண்டு ..அது பல நிலைகளில் பல அர்த்தம் காட்டும்.... தாயின் கருவறையில் நிலவும் கள்ள மற்ற அமைதி ...இந்த அமைதி மீண்டும் கிடைக்காத பொக்கிஷம்.... ஆழ்ந்த உறக்க நிலையில் ஆழ் மனதும் அயர்ந்து தூங்கும் அமைதி ... இது அனைவருக்கும் கிடைத்து விடாத வரம்..... யாருமற்ற தனிமையில் தவிக்க வைக்கும் அமைதி ... .இதில் உடல்தனித்திருக்கும்.. உள்ளம் கொதித்திருக்கும்.... உறவுக்கு இடையே நிலவும் அமைதி ... இது புறக்கணிப்பின் உச்சமாக அமையும்....
நண்பர்களுக்கு இடையே நிலவும் அமைதி ... .அது கலகலத்த உள்ளத்தில் ஏற்பட்ட திடிர் தாக்குதலாக இருக்கும்.... காதலர்களுக்கு இடையே ஏற்படும் அமைதி சில சமயம் ஊடலின் தவிப்பாகவும் .. சில சமயம் உள்ளத்தின் பிணைப்பாகவும் இருக்கும்... அரங்கத்தில் நிலவும் அமைதி கவனத்தின் ஈர்ப்பை குறிக்கும்... ஆலயத்தில் நிலவும் அமைதி அற்பணிப்பு மனதின் தெளிவை விளக்கும்... கடும் கோபத்தின் அமைதி பழிக்கு வழித்தேடும்....
தியானத்தில் ஏற்படும் அமைதி மனத்தெளிவை ஊட்டும்.... முதுமை அடைந்து உலக வாழ்வு இதுதான் என்று உணர்ந்த நிலையில் வரும் அமைதி ... இது வெட்ட வெளிபோல் இருக்கும்.... மரணத்தின் பிடியில் மாட்டி உயிரற்ற உடலாய் மாறிய பின் வரும் அமைதி தாயின் கருவறையை மீண்டும் நினைவூட்டும் ...... அமைதியின் சாயல் வாழ்வு முழுதும் நம்மோடே பயணிக்கும்... அதற்கு என்றும் அமைதியில்லை..
அமைதி பல்வேறு சூழலில் பல்வேறு பொருள்படுகிறது... அமைதியான சூழல் கவிதைக்கும் , கற்பனைக்கும் வழிவகுக்கிறது... யாருமில்லா தனி வெளியில் இயற்கையின் அழகில் அமைதியான தெளிந்த நீரோடை போன்ற மனதுடன், இரைச்சலற்ற நிலையில் பல இனிய கற்பனைகள் வந்து சேரும்....
அமைதியை மெளனத்துடன் ஒப்பிட முடியாது... அது மெளனம் தாண்டிய நிலை... அமைதிக்கு பல முகங்கள் உண்டு ..அது பல நிலைகளில் பல அர்த்தம் காட்டும்.... தாயின் கருவறையில் நிலவும் கள்ள மற்ற அமைதி ...இந்த அமைதி மீண்டும் கிடைக்காத பொக்கிஷம்.... ஆழ்ந்த உறக்க நிலையில் ஆழ் மனதும் அயர்ந்து தூங்கும் அமைதி ... இது அனைவருக்கும் கிடைத்து விடாத வரம்..... யாருமற்ற தனிமையில் தவிக்க வைக்கும் அமைதி ... .இதில் உடல்தனித்திருக்கும்.. உள்ளம் கொதித்திருக்கும்.... உறவுக்கு இடையே நிலவும் அமைதி ... இது புறக்கணிப்பின் உச்சமாக அமையும்....
நண்பர்களுக்கு இடையே நிலவும் அமைதி ... .அது கலகலத்த உள்ளத்தில் ஏற்பட்ட திடிர் தாக்குதலாக இருக்கும்.... காதலர்களுக்கு இடையே ஏற்படும் அமைதி சில சமயம் ஊடலின் தவிப்பாகவும் .. சில சமயம் உள்ளத்தின் பிணைப்பாகவும் இருக்கும்... அரங்கத்தில் நிலவும் அமைதி கவனத்தின் ஈர்ப்பை குறிக்கும்... ஆலயத்தில் நிலவும் அமைதி அற்பணிப்பு மனதின் தெளிவை விளக்கும்... கடும் கோபத்தின் அமைதி பழிக்கு வழித்தேடும்....
தியானத்தில் ஏற்படும் அமைதி மனத்தெளிவை ஊட்டும்.... முதுமை அடைந்து உலக வாழ்வு இதுதான் என்று உணர்ந்த நிலையில் வரும் அமைதி ... இது வெட்ட வெளிபோல் இருக்கும்.... மரணத்தின் பிடியில் மாட்டி உயிரற்ற உடலாய் மாறிய பின் வரும் அமைதி தாயின் கருவறையை மீண்டும் நினைவூட்டும் ...... அமைதியின் சாயல் வாழ்வு முழுதும் நம்மோடே பயணிக்கும்... அதற்கு என்றும் அமைதியில்லை..
No comments:
Post a Comment