கடல் அலைகள் கரைத் தொடுவதை போல ... மனதில் எழும் நினைவலைகள் வாழும் காலம்
வரை தொடர்ந்து கடந்த கால நிகழ்வை தொட்டு விட்டு தான் திரும்புகிறது ...
அவற்றுள் சில சுகமான நினைவுகள்... சில சுமையான நினைவுகள்...
நினைவு சில சமயம் மனதின் வடுபட்ட காயத்தை கிளறி விடும் கத்தியாகவும் ... சில சமயம் காயத்தை ஆற்றும் சக்தியாகவும் மாறிவிடும்... நினைவுகள் கடந்த கால நிகழ்வுகளை ஒரு கோர்வையாக கண் முன் காட்டும்... அதில் சிறு வயதிலிருந்து வாழ்ந்து பயணித்த பாதைகள் புலப்படும்....
சிலர் மலர் நிறைந்த சோலையில் தென்றலுடன் பயணித்திருப்பர்... சிலர் மணல் நிறைந்த பாலையில் வாடைகாற்றுடன் வாழ்ந்திருப்பர்.... கடந்து வந்த பாதை அதற்காக வழிகாட்டிய உள்ளங்கள் ... தடை செய்த பள்ளங்கள் அனைத்துமே நினைவுக்கு வரும்... சில மகிழ்ச்சியான நினைவுகள் தற்போதைய நிலையில் நினைக்க விரும்பாத வகையிலும் .. சில சோகமான நினைவுகள் தற்போது நினைத்து பார்த்தால் சுகமானதாகவும் தோன்றும்....
சில நினைவுகள் கண்களை குளமாக்கும்.. மனதை ரணமாக்கும்... சில வண்ணத்து பூச்சியாய் மனதை பறக்க விடும்.. மனதை தேனில் மிதக்கவிடும்...
இத்தகைய நினைவுகள் நாம் செய்த தவறுகளை மீளாய்வு செய்து நம்மை பக்குவப்படுத்தும்.... வருங்கால வாழ்வுக்கான வழிகாட்டியாக மாறும்.... கடந்து வந்த வாழ்வு முறை, சூழ்நிலை, நட்பு, உறவு, காதல், கடமை, அனைத்தையும் இறுதி வரை மனதில் மறையாமல் யாருக்கும் தெரியாமல் புதுபித்துக் கொண்டே இருக்கும்... நம் விபரம் அறிந்த நாளில் இருந்து நம் நினைவலைகளை மீட்டினால் அது ஒரு காட்சி படமாய் கண் முன் வந்து நவசர உணர்வை நமக்கு விருந்தாக அளித்து விட்டு செல்வதை காணலாம்... இவற்றையும் அவ்வப்போது மூடியுள்ள மன திரையை விலக்கி உணர்ந்து தான் பார்ப்போமே...
நினைவு சில சமயம் மனதின் வடுபட்ட காயத்தை கிளறி விடும் கத்தியாகவும் ... சில சமயம் காயத்தை ஆற்றும் சக்தியாகவும் மாறிவிடும்... நினைவுகள் கடந்த கால நிகழ்வுகளை ஒரு கோர்வையாக கண் முன் காட்டும்... அதில் சிறு வயதிலிருந்து வாழ்ந்து பயணித்த பாதைகள் புலப்படும்....
சிலர் மலர் நிறைந்த சோலையில் தென்றலுடன் பயணித்திருப்பர்... சிலர் மணல் நிறைந்த பாலையில் வாடைகாற்றுடன் வாழ்ந்திருப்பர்.... கடந்து வந்த பாதை அதற்காக வழிகாட்டிய உள்ளங்கள் ... தடை செய்த பள்ளங்கள் அனைத்துமே நினைவுக்கு வரும்... சில மகிழ்ச்சியான நினைவுகள் தற்போதைய நிலையில் நினைக்க விரும்பாத வகையிலும் .. சில சோகமான நினைவுகள் தற்போது நினைத்து பார்த்தால் சுகமானதாகவும் தோன்றும்....
சில நினைவுகள் கண்களை குளமாக்கும்.. மனதை ரணமாக்கும்... சில வண்ணத்து பூச்சியாய் மனதை பறக்க விடும்.. மனதை தேனில் மிதக்கவிடும்...
இத்தகைய நினைவுகள் நாம் செய்த தவறுகளை மீளாய்வு செய்து நம்மை பக்குவப்படுத்தும்.... வருங்கால வாழ்வுக்கான வழிகாட்டியாக மாறும்.... கடந்து வந்த வாழ்வு முறை, சூழ்நிலை, நட்பு, உறவு, காதல், கடமை, அனைத்தையும் இறுதி வரை மனதில் மறையாமல் யாருக்கும் தெரியாமல் புதுபித்துக் கொண்டே இருக்கும்... நம் விபரம் அறிந்த நாளில் இருந்து நம் நினைவலைகளை மீட்டினால் அது ஒரு காட்சி படமாய் கண் முன் வந்து நவசர உணர்வை நமக்கு விருந்தாக அளித்து விட்டு செல்வதை காணலாம்... இவற்றையும் அவ்வப்போது மூடியுள்ள மன திரையை விலக்கி உணர்ந்து தான் பார்ப்போமே...
No comments:
Post a Comment