மனதின் நிலைபாடு அறிவோம்!!!
மனம் என்பது உருவற்ற உணர்வு.. ஆனால் நம் வாழ்நாளை செதுக்குவதில் அதற்கு தான் முதலிடம் ... அதனிடம் உண்டாகும் கேள்விக்கான பதில்களே நம் வாழ்வை நகர்த்தி செல்கிறது... மனம் இரண்டு வகை பாடு உடையது... முதல் வகை எதையும் தீர யோசிக்காது கவலை படாது தன் போக்கில் செல்லும் தன்மையுடையது... அதற்கு கட்டுப்பாடு கிடையாது பயம் அறியாது ... பல நேரம் நேர்பட பேசி பலரின் நிம்மதியை கெடுக்கும்... அவர்களே அவர்களுக்கு எஜமான்... அவர்களே சேவகன்.. இத்தகைய மனம் படைத்தவர்கள் இயல்பு வாழ்க்கையுடன் எளிதில் இயந்து வாழ்ந்துவிடுவர்...
மற்றொரு மன நிலைபாடு உள்ளதே அவர்கள் ஆகச் சிறந்தவர்கள்... ஆனால் அவர்களின் வாழ்வு பக்கம் முழுதும் மற்றவர்களால் நிரப்பப்பட்டிருக்கும்... சோகங்களும், துயரங்களும் அதிகம் கடந்திருக்கும்.. பிறர் நலன் கருதி பழியை தன் மீது சுமத்திக் கொண்டு சிறு குழந்தை போல் வாய் மூடி அழும்... இரக்கம் கொண்டு எவருக்கும் துடிக்கும்... சிந்தனை மிகுதியால் பலருக்கும் அறிவு சொல்லும்... உள்ளுக்குள் குழந்தை போல யாருடைய தேற்றுதலையோ தேடும்... புரியாதவர்களால் பழிக்கு ஆளாகும்... புரிந்தவர்களால் எளிதில் ஏமாற்றப்படும்.. நன்மைக்கும் குழையும்', தீமைக்கும் குமுறும் ... மொத்தத்தில் மெழுகை போல் தன்னை உருக்கி ஒளியாக்கும்...
முதல் வகை மனம் படைத்தவர் சுய சிந்தனையும், தற்சார்பும் கொண்டு தன் போக்கில் தனக்கென ஒரு பாதை வகுத்து வாழ்பவர்கள்... இரண்டாம் வகை மனம் பொது சிந்தனையும், பொது நலனும் பிறர் மகிழ்விற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு வாழ்கின்றனர்...
இது போன்ற மன நிலைப்பாடு யாருக்கும் விரும்பி வருவதில்லை... அது இறையோ, இயற்கையோ நமக்கு அளித்த இயல்பு... இதை மாற்ற இயலாது ஆனால் சீர்படுத்தலாம்... இரு வகை மன நிலையையும் சற்று சீர்படுத்திக் கொண்டால்... சிறப்பான மாற்றம் பெறலாம்.... மனதை சீர்படுத்தி மாற்றம் பெறுவோம்
மனம் என்பது உருவற்ற உணர்வு.. ஆனால் நம் வாழ்நாளை செதுக்குவதில் அதற்கு தான் முதலிடம் ... அதனிடம் உண்டாகும் கேள்விக்கான பதில்களே நம் வாழ்வை நகர்த்தி செல்கிறது... மனம் இரண்டு வகை பாடு உடையது... முதல் வகை எதையும் தீர யோசிக்காது கவலை படாது தன் போக்கில் செல்லும் தன்மையுடையது... அதற்கு கட்டுப்பாடு கிடையாது பயம் அறியாது ... பல நேரம் நேர்பட பேசி பலரின் நிம்மதியை கெடுக்கும்... அவர்களே அவர்களுக்கு எஜமான்... அவர்களே சேவகன்.. இத்தகைய மனம் படைத்தவர்கள் இயல்பு வாழ்க்கையுடன் எளிதில் இயந்து வாழ்ந்துவிடுவர்...
மற்றொரு மன நிலைபாடு உள்ளதே அவர்கள் ஆகச் சிறந்தவர்கள்... ஆனால் அவர்களின் வாழ்வு பக்கம் முழுதும் மற்றவர்களால் நிரப்பப்பட்டிருக்கும்... சோகங்களும், துயரங்களும் அதிகம் கடந்திருக்கும்.. பிறர் நலன் கருதி பழியை தன் மீது சுமத்திக் கொண்டு சிறு குழந்தை போல் வாய் மூடி அழும்... இரக்கம் கொண்டு எவருக்கும் துடிக்கும்... சிந்தனை மிகுதியால் பலருக்கும் அறிவு சொல்லும்... உள்ளுக்குள் குழந்தை போல யாருடைய தேற்றுதலையோ தேடும்... புரியாதவர்களால் பழிக்கு ஆளாகும்... புரிந்தவர்களால் எளிதில் ஏமாற்றப்படும்.. நன்மைக்கும் குழையும்', தீமைக்கும் குமுறும் ... மொத்தத்தில் மெழுகை போல் தன்னை உருக்கி ஒளியாக்கும்...
முதல் வகை மனம் படைத்தவர் சுய சிந்தனையும், தற்சார்பும் கொண்டு தன் போக்கில் தனக்கென ஒரு பாதை வகுத்து வாழ்பவர்கள்... இரண்டாம் வகை மனம் பொது சிந்தனையும், பொது நலனும் பிறர் மகிழ்விற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு வாழ்கின்றனர்...
இது போன்ற மன நிலைப்பாடு யாருக்கும் விரும்பி வருவதில்லை... அது இறையோ, இயற்கையோ நமக்கு அளித்த இயல்பு... இதை மாற்ற இயலாது ஆனால் சீர்படுத்தலாம்... இரு வகை மன நிலையையும் சற்று சீர்படுத்திக் கொண்டால்... சிறப்பான மாற்றம் பெறலாம்.... மனதை சீர்படுத்தி மாற்றம் பெறுவோம்
No comments:
Post a Comment