அவளில்லா நாட்களில் ......
மலர்களும் மலர்ந்திட மறந்தது!!
தென்றலும் தழுவிட மறந்தது!!
வெண்ணிலா குளிர்ந்திட மறந்தது!!
விண்மீன் ஒளிர்ந்திட மறந்தது!!
சிந்தனை பிறந்திட மறந்தது!!
புன்னகை தவழ்ந்திட மறந்தது!!
கண்கள் உறங்கிட மறந்தது!!
இதயம் துடித்திட மறந்தது!!
அனைத்தும் தன்னிலை மறக்க!!
அவன் மட்டும் அவள் நினைவை மறவாதது ஏனோ!!!!!
No comments:
Post a Comment