Tuesday, October 2, 2018

வறுமையின் துயரம்

வறுமையின் துயரம் அறிவோம்!!!!!
கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை.. இந்த புகைப்படத்தைக் கண்ட ஒரு நொடி மனம் சற்று தடுமாறி தத்தளித்து கண்ணீர் துளி வந்தும் வராமலும் தங்கி தவிக்கிறது...
   வறுமை உருவாவதில்லை உருவாக்கப்படுகிறது... "தனி மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்" என்ற பாரதி உணவின்றி வாடி இறந்த உண்மை வரலாறு யாவரும் அறிந்ததில்லை... வறுமை எனும் நோயை ஒரு பட்சமான ஆடம்பரமும், தேவையற்ற விளம்பரமுமே கொண்டு சேர்க்கின்றன... நாம் இருக்கும் அனைத்தையும் அல்ல இயன்ற சிறிதை பகிர்ந்து அளித்தாலே வறுமையை முற்றிலும் அழிக்கலாம்... தேவையற்ற செயல்களுக்கு செலவழிக்கும் சிறிதை இயலாதோருக்கு கொடுப்பதால் அவர்களில் இறைவனை காணலாம்..
   உண்ண உணவின்றி , உடுத்த ஆடையின்றி, உடல் மெலிந்து வற்றி வாடி பட்டினி கிடக்கும் அதேவேளையில்... ஆடம்பர ஆடை அணிந்து கேளிக்கை விருந்து சமைத்து உண்ணத் தெரியாதவர் போல் குப்பை கூடையில் வீசி எறிபவர் எத்தனை பேர் ... உணவுக்கு பஞ்சமில்லை இங்கே.. உணர்விற்கே பஞ்சம் உண்மையில்.. பசிக்கு உணவை கேட்பவனை ஏளனமாகவும், பகட்டுக்கு பால் பொழிந்து சாக்கடையில் நிரம்ப விடுதலை பெருமைக்குரிய செயலாகவும் எண்ணும் எண்ணம் சிலர் மனதில் நிலைத்து விட்டது...
  அவர்களும் வாழ பிறந்தவர்களே... ஏளனம் செய்யாமல் ஏற்று மகிழுங்கள்... விழாக்கள் என்ற பெயரில் ஆடம்பர அலங்காரம் செய்து அடுத்த நாள் குப்பையாக வீசி எறியும் பொருட் செல்வத்தை உணவாக்கி இயலாதோர்க்கு கொடுங்கள்.... வாழும் வாழ்வு குறைவானதே... அதில் சேர்க்கும் பணத்தை விட செய்யும் சேவையே நிலைக்கும்... வறுமையை நீக்க உணர்வுடனும் உணவுடனும் களம் இறங்குவோம்... வருங்கால சமுதாயம் வளமாகட்டுமே...

No comments:

Post a Comment