எதிரிக்கோ!!நட்புக்கோ!!இலக்கணம் எழுதி வைக்கப்படவில்லை... எதிரியும்
நண்பனாகலாம்.. நண்பனும் எதிரி ஆகலாம்... நிரந்தரமற்ற வாழ்வில் இது தான் என
அறுதியிட்டு கூறிட எதுவும் இல்லை... சூழலோடு ஒன்றி அதே நேரத்தில்
கட்டுப்பாடோடு வாழ கடமைப்படுவோம்... யார் மீதும் அதிக எதிர்பார்ப்பும்
நம்பிக்கையும் அளவு கடந்த அன்பையும் வைத்திடல் ஒரு வித முட்டாள் தனமும்
கூட... அன்பு கொண்ட இதயங்களில் அடிக்கடி நிகழும் நிகழ்வு இது.. ஆனால் இந்த
எதிர்பார்ப்பு அதிக நேரம் ஏமாற்றமே தரும்... யார் மீதும் அதிக வெறுப்பும்
ஏற்பட்டு விட கூடாது.. அவர்களும் திருந்தி திரும்ப வரலாம்... அன்பு
குறைந்திடும் நிலையில் அதை வற்புறுத்தி கட்டாயமாக பெறுவது.. இனித்திருந்த
கனியை கசக்கி எடுத்து நசுக்கிவிடுதல் போல.. அவ்வாறு கட்டாயத்தில் பேரில்
பெறப்படுவது அன்பும் அல்ல.. எதிர்ப்பையும் வஞ்சம் வைத்து பழி தீர்க்க
துடிக்க கூடாது... நிகழும் எதுவும் நன்மைக்கே என்ற கோட்பாடோடு வாழ்வை
நிகழ்த்தி செல்லும் மனப்பான்மையை வளர்த்திக் கொள்ள வேண்டும்... எதுவும்
கடந்து போகும் அதுவே வாழ்க்கை... நாம் எதை எதிர்பார்த்தாலும், அன்பு
செய்தாலும், ஆசைப்பட்டாலும், எதிர்ப்பு காட்டினாலும் நடக்கும் நிகழ்வுகள்
நடந்தே தீரும் எனற வாழ்வின் உச்சக்கட்ட நிலையை உணர்ந்துக் கொண்டால்.. இவை
அனைத்தும் பொருளற்றதாக தெரிவதை உணரலாம்... முக்கியத்துவம் இல்லாத சிலவற்றை
மூளைக்கு கொண்டு செல்லாமல் ... அமைதியும் , தெளிவுமான சிந்தனையை வளர்த்துக்
கொள்வோம்... அந்த மனநிலை நம்மையும் உயர்த்தி நம்மை சார்ந்த யாவையும்
உயர்த்தும்..
Superb
ReplyDeleteநன்றி
Delete