Monday, September 24, 2018

எண்ணத்தின் உயர்வு ...

உயர்வான எண்ணம் வளர்த்திடுவோம்.... எண்ணம் உயர்ந்தால் எதுவும் உயரும் ... தாழ்ந்த எண்ணங்களால் நம்மையும்  தாழ்த்திக் கொண்டு மற்றவர்களையும் துன்புறுத்த கூடாது.... உயர்ந்த எண்ணம் தன்னம்பிக்கையையும், முயற்சியையும் துணை சேர்த்து வெற்றியை பெற்று தரும்...புலம்புவதோ, பிறர் கருணையை பெற முயற்சிபதோ நம்மை தனித்து செயல்படவிடாது.... இறுதி வரை யாரையேனும் சார்ந்து வாழு(டு)ம் சூழலுக்கு தள்ளிவிடும்.... நம்மை பற்றி நமக்கே ஒரு உயர்ந்த சிந்தனை வரவேண்டும்.... யாருடைய பிரதிபலிப்பாகவோ நகலாகவோ நாம் இருக்க கூடாது... நாம் நாமாக இருக்க வேண்டும்... நமக்கென்று தனிப் பாதை வகுக்க வேண்டும்... பிறரோடு ஒப்பீடு எல்லை மீறி செல்ல கூடாது... யாரோ ஒருவருக்கு நேர்ந்ததுன்பத்தையோ, துயரத்தையோ கண்டு முற்றிலும் வாழ்வை வெறுமையாக நினைக்க கூடாது... நமக்கான வாழ்வு சரித்திரம் எழுதபட்டு கொண்டிருக்கும் அதை சரியான பாதையில் பயணிக்க செய்வது நம் எண்ணங்களே...
       சிலருக்கு துன்பமானதாக அமைந்த வாழ்வு மற்றவருக்கு இன்பமாகிறது... இதன் சாரம் எண்ணமே... எண்ணத்தின் தெளிவும், உயர்வும் எதையும் ஏற்றுக்கொள்ளும் நிறைவை தருகிறது ... பிறர் பற்றிய ஒப்பீட்டில் வாழ்வை புறக்கணிப்பவர் கோழைகளே... தன்னை பற்றிய உயர்ந்த எண்ணம், ஆற்றலின் மீதான நம்பிக்கை எல்லாம் நம்மை உயர்த்தும்... பிறரை உதாரணமாக பார்த்து நகல் எடுக்காமல் நாமே உதாரணமாக மாறும் அளவிற்கு உயர்ந்த எண்ணம் வளர்க்க வேண்டும்... நமக்கு நாம் தான் நண்பன், குரு எல்லாமே ... தன்னம்பிக்கை எண்ணம் இழந்து விட்டால் எத்துணை துணை இருந்தாலும் தனித்து வினை ஆற்ற இயலாமல் பிணை கைதிபோல் அடைபட நேரிடும்.... உயர்ந்த எண்ணம் வளர்த்து எண்ணியதை திண்ணமாக செயலாற்றும் போது வண்ணமான வாழ்வை பெறலாம்...

No comments:

Post a Comment