Sunday, September 23, 2018

கடவுச் சீட்டு

"திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு" என்பார்கள்.. ஆனால் திரைக்கடல் தாண்டி செல்வதே செல்வங்கள் தான் என்பதை யார் அறிவார்... வெளிநாட்டு வாழ்க்கை வெளியில் பார்ப்பதற்கு அழகாகவும், மகிழ்வாகவும் இருப்பது போல தோன்றினாலும் உண்மையில் அது அப்படி அல்ல... வீடு, உறவு, மொழி, நட்பு, நாடு அனைத்தையும் தாண்டி மனதை தன் சொந்த மண்ணிலே அழவிட்டு... வெற்று உடலோடு பயணம் செய்யும் வலி அத்தகைய உள்ளங்களுக்கே வெளிச்சம்... "வெளிநாட்டு பணம் புது நகை மின்னுகிறது" இது அவன் மனைவி தினமும் காதில் வாங்கும் சொல்... பொன்னகை அணிந்திருப்பாள்.. அவள் புன்னகையை தொலைத்திருப்பது யாருக்கும் தெரியாது... கைபேசியின் செல்லமுத்தத்தை உணர்வுடன் பெற முடியாத குழந்தைகள்... பிற குழந்தைகள் தந்தையுடன் விளையாடுவதை பார்த்து தவிப்பது பிறருக்கு புரியாது...
   "அவருக்கென்ன குறைச்சல் மகனுக்கு வெளிநாட்டு வேலை " அவன் தந்தை அனுதினம் ஒரு முறையேனும் கேட்கும் வார்த்தை... தன் மகன் சிறு வயதில் பயன்படுத்திய விளையாட்டு பொருள் முதல் ஒவ்வொன்றையும் ஏக்க பார்வை பார்த்து செல்லும் அவரது துடிப்பு யாருக்கும் தெரியாது... தன் மகனுக்கு என்ன பிடிக்கும் என தேடி தேடி அன்பு கலந்து சமைத்த உணவை விட்டு என்ன உண்டானோ என தினம் உண்ணாமல் தவிக்கும் தாயின் மனநிலை யார் அறிவார்...
    துளிரும் வயதில் வாடிடும் குழந்தை... கனவில் வாழ்வு நடத்தும் மனைவி ... செல்ல சண்டை போட்டு சிரித்து மகிழ்ந்த உடன் பிறந்தோர்... தள்ளாத வயதில் தவித்திருக்கும் தாய் தந்தையர் யாவரையும் பிரிந்து வாடும் அவன் கைபேசியில் உரையாடும் போது தனக்கென ஒரு மிடுக்குடன் பேசினாலும் உண்ண உணவும், எண்ணம் பகிரமொழியும் இன்றி வாடுவது யார் அறிவார்... விழாக்கள் புறக்கணிப்பான்... அதை எண்ணி ஏங்கி தவிப்பான்.... இறப்பை புறக்கணிப்பான் அதை எண்ணி உள்ளுக்குள் அழுவான்... உடல் நலம் கெடுகையில் தாய் மடி தேடி அலையும் உள்ளத்தை எண்ணி குமறுவான்... ஏக்கம் நிறைந்த கண்கள் நோக்குவது நாட்காட்டியின் நாட்கள் நகரும் வேகத்தை ... சொந்த ஊர் திரும்பும் நேரத்தை .... "திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு" என்பார்கள்.. ஆனால் திரைக்கடல் தாண்டி செல்வதே செல்வங்கள் தான் என்பதை யார் அறிவார்... வெளிநாட்டு வாழ்க்கை வெளியில் பார்ப்பதற்கு அழகாகவும், மகிழ்வாகவும் இருப்பது போல தோன்றினாலும் உண்மையில் அது அப்படி அல்ல... வீடு, உறவு, மொழி, நட்பு, நாடு அனைத்தையும் தாண்டி மனதை தன் சொந்த மண்ணிலே அழவிட்டு... வெற்று உடலோடு பயணம் செய்யும் வலி அத்தகைய உள்ளங்களுக்கே வெளிச்சம்... "வெளிநாட்டு பணம் புது நகை மின்னுகிறது" இது அவன் மனைவி தினமும் காதில் வாங்கும் சொல்... பொன்னகை அணிந்திருப்பாள்.. அவள் புன்னகையை தொலைத்திருப்பது யாருக்கும் தெரியாது... கைபேசியின் செல்லமுத்தத்தை உணர்வுடன் பெற முடியாத குழந்தைகள்... பிற குழந்தைகள் தந்தையுடன் விளையாடுவதை பார்த்து தவிப்பது பிறருக்கு புரியாது...
   "அவருக்கென்ன குறைச்சல் மகனுக்கு வெளிநாட்டு வேலை " அவன் தந்தை அனுதினம் ஒரு முறையேனும் கேட்கும் வார்த்தை... தன் மகன் சிறு வயதில் பயன்படுத்திய விளையாட்டு பொருள் முதல் ஒவ்வொன்றையும் ஏக்க பார்வை பார்த்து செல்லும் அவரது துடிப்பு யாருக்கும் தெரியாது... தன் மகனுக்கு என்ன பிடிக்கும் என தேடி தேடி அன்பு கலந்து சமைத்த உணவை விட்டு என்ன உண்டானோ என தினம் உண்ணாமல் தவிக்கும் தாயின் மனநிலை யார் அறிவார்...
    துளிரும் வயதில் வாடிடும் குழந்தை... கனவில் வாழ்வு நடத்தும் மனைவி ... செல்ல சண்டை போட்டு சிரித்து மகிழ்ந்த உடன் பிறந்தோர்... தள்ளாத வயதில் தவித்திருக்கும் தாய் தந்தையர் யாவரையும் பிரிந்து வாடும் அவன் கைபேசியில் உரையாடும் போது தனக்கென ஒரு மிடுக்குடன் பேசினாலும் உண்ண உணவும், எண்ணம் பகிரமொழியும் இன்றி வாடுவது யார் அறிவார்... விழாக்கள் புறக்கணிப்பான்... அதை எண்ணி ஏங்கி தவிப்பான்.... இறப்பை புறக்கணிப்பான் அதை எண்ணி உள்ளுக்குள் அழுவான்... உடல் நலம் கெடுகையில் தாய் மடி தேடி அலையும் உள்ளத்தை எண்ணி குமறுவான்... ஏக்கம் நிறைந்த கண்கள் நோக்குவது நாட்காட்டியின் நாட்கள் நகரும் வேகத்தை ... சொந்த ஊர் திரும்பும் நேரத்தை .... கடவுச் சீட்டை சுமந்துக் கொண்டே கடந்து செல்கிறது அவனது இயல்பு வாழ்க்கை....

2 comments: