Saturday, September 22, 2018

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கையை வளர்த்திட முனைவோம்... தன்னம்பிக்கையும் சுயசார்பும் தான் வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு இட்டு செல்லும்.. யாரும் இல்லை என புலம்பும் ஒரு சாரார்... இருந்தும் பயனில்லை என புலம்பும் மற்றொரு சாரார்... நம்மை தவிர யாரும் நம்மை புரிந்துக் கொள்ள முடியாது.. நமது திறமை என்ன.. நாட்டம் என்ன.. வலு என்ன.. எதை நோக்கி சென்றால் ஒளிரலாம் என பிறரால் கூற இயலாது.. சுயசார்பும் தன்னம்பிக்கையும் நமக்குள் எழும் வினாக்களுக்கு பதிலளித்து நம்மை முன்னேற்றி செல்லும்.. உலகில் உயர்ந்து வரலாற்றில் இடம் பிடித்த அனைவரும் யாரையும் சார்ந்திராத சூழலில் வளர்ந்தவர்களே.. அவர்களால் மட்டுமே தன்னை உயர்த்திக் கொள்ள முடியும்.. பிறரை சார்ந்திருப்பவர்கள் கூட்டுக்குள் அடைப்பட்ட பறவை போன்றவர்கள்... தற்சார்பு சிந்தனை கொண்டவர்கள் காட்டில் வளரும் பறவை போன்றவர்கள்.. சுதந்திர உணர்வையும் தற்சார்பு சிந்தனையே உருவாக்கும்... பறவைகளில் மற்ற பறவைக்கும் கழுகுக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு... அது தன்னம்பிக்கை மிக்கது... மழை வந்தால் மற்ற பறவைகள் கூட்டைத் தேடி ஓடும் கழுகு உயர பறந்து மழை மேகங்களுக்கு மேலே செல்லும்... தோல்வியை கண்டு துவளாது.. இயற்கையாக எய்தும் முதுமையைக் கூட வென்று மறுபிறவி எடுக்கும்.. முதுமையுற்ற தனது இறகுகளையும் , நகங்களையும் தானே சிரமபட்டு அகற்றிவிட்டு மீண்டும் புது சிறகுடன் மறுபிறவி எடுக்கும்... தன்னம்பிக்கையின் சின்னமாக விளங்கும்... அது போல தான் தன்னம்பிக்கை கொண்டவர்களின் வாழ்வும் ... ஆதரவு இல்லாதவர்களே ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்த இயலும்... சோதனைகளையும் சாதனைகளாக மாற்ற இயலும்...புலம்பி வாழ்நாளை வீணாக்கி கூட்டுக்குள் முடங்காமல் தன்னம்பிக்கை எனும் சிறகை விரித்து பறந்திடுவோம்.. நம்மால் ஒரு புது உலகம் படைக்கப்படுவதை உணரலாம்.

2 comments: