Sunday, September 23, 2018

ஆறுதல் மொழி

         ஆறுதல் மொழி வழங்க பழகுவோம்... 
   பிறர் துன்பத்தை வேறு வகையில் சரி செய்ய இயலாவிடினும் ஆறுதல் மொழியாலே தேறுதல் செய்வோம்... பிறர் துன்பம் கண்டு எள்ளி நகைக்காமல்...புறக்கணித்து செல்லாமல் ... ஆறுதல் கூறுங்கள்... இந்த உலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டு மிடுக்காக திரிந்தாலும் யாவரும் எதிர்பார்ப்பது இனிய ஆறுதலான வார்த்தைகளை தான்... அது புண்பட்ட உள்ளங்களுக்கு மாபெரும் மருந்து... ஆறுதல் மொழிகளும் தேறுதல் வார்த்தைகளும் துன்ப நிலையை பாதியாய் குறைக்கும்....
         வாழ்வு ஒரு வட்ட பாதை இதில் இன்பம் துன்பம் இரண்டையும் கடந்தே யாவரும் பயணிக்க வேண்டும்... ஒரு சில நேரங்களில் பிறரின் சோக சரித்திரம் கூட மற்றவருக்கு ஆறுதலாகும்... உள்ளம் என்பது எல்லையில்லா எண்ணங்களில் விரிவடைந்துக் கொண்டே முடிவிலா பயணம் செய்வது.... அது முடிவில் எதிர்பார்ப்பது ஆறுதலைதான்... துன்பத்தின் உச்சத்தில் வேகத்தில் செல்லும் மனதிற்கு வேகதடையாக ஆறுதல் மொழி அமைந்து தேற்றி வெற்றி பாதைக்கு வழிகாட்டும்... கனிவான மொழி கண்ணீரை துடைத்திடும்... ஆறுதல் மொழி அன்பை வளர்த்திடும்....
           எத்தகைய கடின மனதிற்குள்ளும் கை நீட்டி அழுது ஆறுதல் தேடும் குழந்தை ஒன்று அலைந்துக் கொண்டு தான் இருக்கும் ... அதுவே உண்மை... அதை தூக்கி சமாதானம் செய்யுங்கள்... கடின மனதும் மென்மையாக மாறுவதை உணரலாம்...
Image may contain: 1 person

2 comments: