Friday, November 2, 2018

பிரிந்து விடாதே

பிரிந்து விடாதே என
அவள் போராடுவதும்!!
பிரிந்து விடுவாயா என
 அவன் வாதாடுவதும்!!
அவன் தேற்றுவான் என தெரிந்தே
அவள் கண்ணீர் சிந்துவதும்!!
அவள் கண்ணீரை கண்தாண்டவிடாமல்
அவன் கண்களால் ஏந்திக் கொள்வதும்!!
முடிந்த ஊடலை அவனது
தேறுதலுக்காக அவள் நீட்டிப்பதும்!!
பொய் ஊடல் என அறிந்தும் அவள் 

புன்னகைக்கும் வரை அவன் 
சமாதானம் செய்வதும்!!
அன்பில் சிறந்தவர் யார் என 

மயங்கத் தான் வைக்கிறதே!!!!
 படம் இதைக் கொண்டிருக்கலாம்: பறவை

No comments:

Post a Comment