Friday, November 2, 2018

புரிதல்

புரியாமல் கொல்வோரையும் புரிந்துக் கொள்வோம்!!!
தவறான புரிதல் சில நேரங்களில் நெருங்கிய நட்பையோ, உறவையோ விலக செய்து விடும்... பேசும் வார்த்தைகளோ, செயல்களோ தவறான புரிதலால் தடுமாற்றம் ஏற்படுத்தி மன வாட்டம் செய்து விடும்.. மன வாட்டம் போக்கும் மருந்து மனம் விட்டு பேசுதலே...
நன்மையோ தீமையோ மனம் விட்டு பேசும் போது பிரிதல் தவிர்க்கப்படும்... விரிசல் அதிகரிக்காமல் காக்கப்படும்... வார்த்தை ஒலிப்பில் கவனமும், சூழலுக்கு தகுந்தவாறு பேசுதலும் தவறான புரிதல் ஏற்படாமல் தவிர்க்கும்... எண்ணம் போல் வீசாமல் பிறர் மன நிலை அறிந்து பேச வேண்டும்...
விட்டுக் கொடுத்தலும் , ஏற்றுக் கொள்ளுலும் தவறான புரிதலை மேலும் தவிர்க்கும்.. அது உறவை தக்க வைத்து அன்பை கூட்டி தரும்... தவறான புரிதலை அப்படியே விட்டு விடாமல் அதனை விளக்கி புரிய வைத்து உறவை விலகாமல் காத்திடுவோம்.
 படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், குழந்தை மற்றும் குளோஸ் அப்

No comments:

Post a Comment