Friday, November 2, 2018

வாய்ப்பு

    வாய்ப்புகளை தேடாமல் உருவாக்க கற்றுக் கொள்ளோம்!!!
பெரும்பான்மையோர் வாழ்வு வாய்ப்பு தேடி அலைவதிலேயே முற்றுப் பெறுகிறது... பணம் இல்லை, பிறர் ஆதரவு இல்லை, நல்ல சூழல் இல்லை என புலம்பி ஆயுளை கடத்துபவர் பலர்...
வெற்றியின் சரித்திரத்தை புரட்டி பார்த்தால் அமைந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டவர்களை விட .. தனக்கென வாய்ப்பை ஏற்படுத்தி கொண்டவர்களே அதிகம் இருப்பார்கள்... இயலாது என்ற வார்த்தைக்குள் முடங்காமல் எந்த சூழலையும் தனக்கேற்ப மாற்றி மகிழ்வுடன் ஏற்பவர்களே சாதனையாளர்கள்...
த்தகைய மனம் படைத்தவர்கள் திறமையும், எதையும் தாங்கும் வலிமையையும் அதிகம் பெற்றிருப்பர்... யாரும் பாதுகாக்காத காட்டுமரம் வலிமையோடு வளர்தலை போல தானே வலிமையோடு வளர்ந்து நிற்பர்....
மகிழ்ச்சி நம்மிடமே உள்ளது.. அதை வெளியில் தேடாமல் நமக்கு கிடைத்ததைக் கொண்டு அதை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்... வாய்ப்புகளை யாசகமாக பெற்று அடிமையாகாமல்.. தானே உருவாக்கி தலைமை பண்போடு மிளிர முயல்வோம்..

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார் மற்றும் வெளிப்புறம்

பிரிந்து விடாதே

பிரிந்து விடாதே என
அவள் போராடுவதும்!!
பிரிந்து விடுவாயா என
 அவன் வாதாடுவதும்!!
அவன் தேற்றுவான் என தெரிந்தே
அவள் கண்ணீர் சிந்துவதும்!!
அவள் கண்ணீரை கண்தாண்டவிடாமல்
அவன் கண்களால் ஏந்திக் கொள்வதும்!!
முடிந்த ஊடலை அவனது
தேறுதலுக்காக அவள் நீட்டிப்பதும்!!
பொய் ஊடல் என அறிந்தும் அவள் 

புன்னகைக்கும் வரை அவன் 
சமாதானம் செய்வதும்!!
அன்பில் சிறந்தவர் யார் என 

மயங்கத் தான் வைக்கிறதே!!!!
 படம் இதைக் கொண்டிருக்கலாம்: பறவை

புரிதல்

புரியாமல் கொல்வோரையும் புரிந்துக் கொள்வோம்!!!
தவறான புரிதல் சில நேரங்களில் நெருங்கிய நட்பையோ, உறவையோ விலக செய்து விடும்... பேசும் வார்த்தைகளோ, செயல்களோ தவறான புரிதலால் தடுமாற்றம் ஏற்படுத்தி மன வாட்டம் செய்து விடும்.. மன வாட்டம் போக்கும் மருந்து மனம் விட்டு பேசுதலே...
நன்மையோ தீமையோ மனம் விட்டு பேசும் போது பிரிதல் தவிர்க்கப்படும்... விரிசல் அதிகரிக்காமல் காக்கப்படும்... வார்த்தை ஒலிப்பில் கவனமும், சூழலுக்கு தகுந்தவாறு பேசுதலும் தவறான புரிதல் ஏற்படாமல் தவிர்க்கும்... எண்ணம் போல் வீசாமல் பிறர் மன நிலை அறிந்து பேச வேண்டும்...
விட்டுக் கொடுத்தலும் , ஏற்றுக் கொள்ளுலும் தவறான புரிதலை மேலும் தவிர்க்கும்.. அது உறவை தக்க வைத்து அன்பை கூட்டி தரும்... தவறான புரிதலை அப்படியே விட்டு விடாமல் அதனை விளக்கி புரிய வைத்து உறவை விலகாமல் காத்திடுவோம்.
 படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், குழந்தை மற்றும் குளோஸ் அப்

அவன் வருவான்

அவள் ஊடல் கொள்வதும்!!
சண்டையிடுவதும்!!
கோபம் கொண்டு பாராமுகமாய் செல்வதும் !!
அவன் பார்க்கத்தான்!!
அவன் வருவான்!!
பின் தொடர்வான்!!
வாட்டம் போக்குவான்!!
மனமாற்றம் செய்வான்!!
என அவள் அறிவாள்!!
ஊடல் கொண்டாலும்
தன்னை ஒரு கணமும்
பிரியாள்!!
வேறு எதுவும்
அறியாள்!!என அவனும் அறிவான்!!
படம் இதைக் கொண்டிருக்கலாம்: பறவை

நீயே நான்

அவ்வப்போது நினைக்கிறாய் நீ!!!
எப்பொழுதும் நினைக்கிறேன் நான்!!!
எனை காட்சியாக காண்பதால்
கடந்தவுடன் மறக்கிறாய்!!!
உனை கண்களாய் நினைப்பதால் 

உடன் இணைத்து செல்கிறேன்!!!
எனக்காக காலம் ஒதுக்குகிறாய்

 உனக்குள்!!!!
நீயே கால சக்கரமாக சுழல்கிறாய்

எனக்குள்!!!
நீ என்னை தீயாக 

நினைக்கிறாய்!!!
நான் என்னை நீயாக
நினைக்கிறேன்!!!படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார்

மறதி என்பது வரமா? சாபமா?!!!!!

மறதி என்பது வரமா? சாபமா?!!!!!
மறதி என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் பல மனங்கள் ஆறாத ரணமாகவே இருந்திருக்கும்... மறந்து விட கூடாது என சில நினைவுகளும் மறந்து விட வேண்டும் என சில நினைவுகளும் அனைத்து மனங்களிலும் இருக்கும்...
ஏற்பட்ட காயங்கள், பறிக்கப்பட்ட இழப்புகள், மறைக்கப்பட்ட ரகசியங்கள் மறக்கும் போது தான் பட்ட மரமாகி போன மனம் புதுமையை நோக்கி துளிர் விடும்... மறதி இல்லையெனில் அது எப்போதோ மண்ணோடு மக்கியிருக்கும்... மறதி ஒன்றே மனதை மீட்டு மறுபிறவி எடுக்க செய்து புதுவித பயணத்திற்கு வழிகாட்டும்... மறதி இல்லை எனில் மரணித்த இதயங்களின் கூடமாக உலகம் மாறியிருக்கும்... இத்தகைய நிலையில் மறதி என்பது ஒரு வரமே....
அதே வேளையில், அன்புக்குரிய மனங்களில் நம் நினைவுகள் அழிந்து மறதி ஏற்படும் போதும், மறக்க கூடாத பொற்கால நினைவுகள் நம் மனம் விட்டு போகும் போதும் அது சாபம் என தோன்றும்....
எதுவாகினும் மறதி போற்றுதலுக்குரியதே .. அது பகையை ஆற்றி பழிவாங்கும் எண்ணத்தை குறைக்கும்... உறவை தேற்றி உடைந்த மனதை ஒட்ட வைக்கும்... தோல்விகளால் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்தாக மாறி வெற்றி எனும் விருந்தை ஊட்டும்...
மறக்கவேண்டியவற்றை மறந்து இறந்த கால நிகழ்வை எண்ணி வருந்தாமல் வருங்காலத்தை வசந்தமாக்குவோம்..